<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6627184</id><updated>2011-04-21T14:22:00.303-07:00</updated><title type='text'>மக்களவைத் தேர்தல் 2004</title><subtitle type='html'>This is all about Parliament elections 2004</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sifyrayan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>15</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108168092243571547</id><published>2004-04-11T03:55:00.000-07:00</published><updated>2004-04-11T03:59:14.810-07:00</updated><title type='text'>ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி </title><content type='html'>பாகம் - 1&lt;br /&gt;&lt;br /&gt;என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ்மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும் வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காகவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாக பேசியிருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;பாபா படத்தில் நான் சிகரெட். பிடிக்கறதும், மது அருந்துவதும் இளைஞர்களை கெடுத்துவிடும் என்ற குற்றச்சாட்டை கூறி, அந்த பட வெளியீட்டன்று படச்சுருளை கடத்தி, தியேட்டர் திரையை கிழித்து, திரையரங்க மேனேஜரை கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளை கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பலகோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னிய சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர், என்னைவிட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. வெறும் தொலைபேசியிலாவது, "தம்பி இந்த மாதிரியான சீன்களையெல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களை கெடுக்கும்'' என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அந்த காட்சிகளை நீக்குவதைப் பற்றி சிந்தித்து இருப்பேன். முடிந்தால் அந்த காட்சிகளை நீக்கி இருப்பேன். முடியவில்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்த படத்தில் தவிர்த்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது "இதுபோன்ற காட்சிகளை திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களை கெடுத்துவிடும்'' என்று சினிமா தணிக்கை குழுவிடம் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதை செய்யாமல் கோடானகோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாசவேலைகளில் ஈடுபடுவது சரிதானா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக்கூடாது என்று சொல்லி என்னுடைய ரசிகர் மன்ற பலகைகளை உடைத்துத் தள்ளி, ரசிர்களின் நெற்றியில் ""முட்டாள்'' என்று எழுதிக்கொள்ளும்படி சொன்னார்கள். என் ரசிகர்கள் ஆவேசமடைந்தார்கள், நானும் பொறுமை காக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டேன். நானும் அமைதியாகத்தான் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் என்னை "சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி'' என்று மிகக்கேவலமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் விமர்சித்தார். என் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டு கொந்தளித்தார்கள். "எங்கள் எதிர்ப்பை காட்டியே தீருவோம்'' என்று ஒரு குரலாக அவர்களுடைய உணர்ச்சிகளை கொட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய உணர்வுகளில் நியாயம் இருப்பதினால் அதை மதித்து பா.ம.க. போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கச் சொன்னேன். அவர்கள் செயல்பட தொடங்கியவுடன் அந்த ஆறு தொகுதிகளில் இருக்கும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் என் ரசிகர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அடியாட்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையினர் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் என் ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. ஆகையால் அந்த ஆறு தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வெளிப்படையான ஆதரவு என் மன்றங்கள் அளித்தால் அவர்கள் என் ரசிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அதனால் வெளிப்படையான என் மன்ற ஆதரவை அ.தி.மு.க. பா.ஜ.க.விற்கு அளிக்கும்படி என் மன்றங்களுக்கு ஒப்புதல் அளித்தேன். எனக்கு டாக்டர் ராமதாஸை எதிர்ப்பதைவிட என் ரசிகர்களின் நலனும், உயிரும், பாதுகாப்பும்தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தருணத்தில் மதுரையில் என் ரசிகர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடத்திய ராட்சஸ தாக்குதல்களை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலமும், செய்தித்தாள்களின் மூலமும் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவத்திற்காக டாக்டர் ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த தமிழக காவல்துறையினருக்கும், தமிழக அரசிற்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வழக்கிலிருந்து நாம் அவர்களை விடப்போவதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்றுஇ ஊழல், இரண்டாவதுஇ வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆன்மீகவாதி, எனக்கு எதற்கு பழிவாங்கும் உணர்ச்சி? என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மீகவாதிதான். ஆனால் ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தை காட்டும் அளவிற்கு ஆன்மீகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மீகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்த தவறை நான் ஆயிரம் முறை செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை வாழவைத்த ரசிகப் பெருமக்களே, உங்க பலம் என்னவென்று டாக்டர் ராமதாசுக்கு புரியவைத்து விட்டீர்கள், போதும், இனிமேல் கருப்புக்கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜனநாயக ரீதியில் இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம். தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்றுவிட்டோமென்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றுவிட்டால் நாம் ஜெயித்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமாக எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்கு கருப்புக்கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கிவிட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பாய், தில்லி, கொல்கத்தா, மலேசியா, அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ், ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால்கூட அங்கும் என் ரசிகர்கள் கருப்புக்கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்? அங்கேயும் அடியாட்களை கூட்டிக்கிட்டு போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா? வேண்டாம் இந்த வெறிச் செயல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராமதாஸ் அவர்களே, என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து விட்டீர்கள். இதற்குமேல் உங்களைப் பற்றி கூற என் மனம் இடம்கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;===== &lt;br /&gt;&lt;br /&gt;பகுதி - 2&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது முக்கியமான கட்டத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தல் ஆகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்குஇஅதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது. நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்துவரும் எந்த ஜீவநதியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயம். மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது. ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரையில் இந்திய நாட்டின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். திரு. அத்வானி அவர்களே அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்இ உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவஇமாணவிகளே, படித்தவர்களே, நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்னு ஓட்டு போட போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு! &lt;br /&gt;&lt;br /&gt;நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஜெய் ஹிந்த்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108168092243571547?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108168092243571547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108168092243571547'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_11_archive.html#108168092243571547' title='ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி '/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108161915516226321</id><published>2004-04-10T10:45:00.000-07:00</published><updated>2004-04-10T10:49:45.873-07:00</updated><title type='text'>நேசமுடன் : மடல் இதழ்</title><content type='html'>சென்ற புதன் அன்று நேமுடன் என்ற மடல்இதழ் (Email Magazine) தொடங்கினேன். என் அட்ரஸ் புத்தகத்தில் இருந்த கிட்டத்தட்ட 366 நபர்களுக்கு அன்று அதை அனுப்பி வைத்தேன். சின்ன ஐடியாதான். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் மடலாடற் குழுக்களுக்கு முந்தைய வடிவம் அது. ஆனால், இன்னும் வலுவான வடிவமாகவே எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எண்ணம் எனக்கு உதித்தாலும், அதற்கு முன்னோடிகள் நிறையவே இருக்கிறார்கள். ஜப்பானிய பிரதமர் ஓர் மடல் இதழ் நடத்துகிறார். பிம்ளி என்றொரு ஆங்கில இலக்கிய மடல்இதழ் வெளிவருகிறது. எளிமை, நேரடித்தன்மை, வாசகனோடு அணுக்கம் இவையே  மடல்இதழின் மிகப்பெரிய பலம். &lt;br /&gt;&lt;br /&gt;'நேசமுடன்' மடல்இதழ், நண்பர்களின் அஞ்சல்பெட்டிகளை அடைந்த சில மணித்துளிகளிலேயே சடால் சடாலென பதில்கள். வாழ்த்துக்கள். ஆலோசனைகள். கருத்துக்கள். கிட்டத்தட்ட 41 பேர் பதில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் திக்குமுக்காடிப் போய்விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வடிவம் நண்பர்களுக்குப் பிடித்திருக்கிறது. உள்ளடக்கத்தை மேம்படுத்தவேண்டியது என் கடமை. எதைக் கொடுத்தாலும், personal touch உடன் இருக்கவேண்டும் என்பது முதல் பாடம். கற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஐகாரஸ் பிரகாஷ், மடல்கள் விநியோகத்தில் செய்யப்படவேண்டிய முன்னேற்றம், செக்யூரிட்டி ஆகியவை பற்றி விளக்கி, உதவ முன்வந்துள்ளார். அவரது உதவியால், வரும் புதன் அன்று வரும் நேசமுடன் 2 இதழ், இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட, 745 மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சேகரிக்கத் தொடங்கியபோதுதான், எனது பழைய கனவு ஒன்று நனவாகத் தொடங்கியது. இணையத்தைப் பொறுத்தவரை, வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரின் மின்னஞ்சல்களையும் ஒருஇடத்தில் சேகரித்துச் சேமித்து, முறையான டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவே அது. 745 மின்னஞ்சல் முகவரிகளையும் அப்படித்தான் ஒழுங்காக டேட்டாபேஸாக உருவாக்கியிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல், மற்றொரு கனவு, முகவரிகளைச் சேகரிப்பது. தமிழில் தரமான நூல்களையும் பத்திரிகைகளையும் படிக்கும் ஆர்வமுள்ள 10000 பேர்களாவது  இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பத்தாயிரம் பேர்களின் முகவரியோ, மின்னஞ்சலோ, தொடர்பு எண்ணோ, அவர்களின் ஆர்வமுள்ள இலக்கியத் துறையோ, எதுவுமே புரொபைலிங் செய்யப்படவில்லை. தமிழ் பதிப்புலகம், இந்தப் பத்தாயிரம் பேர்களை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் யார் என்று தெரியாமலேயே வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆர்வமுள்ளவர்களின் முகவரிச் சேகரித்து, சேமித்து, செப்பனிட்டு, வடிவமைத்து வைக்க வேண்டும் என்பது எனது அவா. இத்தகைய ஓர் சேமிப்பு பல்வேறு வகைகளில், நமக்கு உதவும். புத்தகங்கள் வெளியிடுபவர்களுக்கு, புத்தகம் வாங்குபவர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை இத்தகைய ஓர் சேமிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான எளிய தொடக்கத்தை நேற்று செய்தேன். கிட்டத்தட்ட 2500 முகவரிகளை ஓரிடத்தில் இருந்து தொகுத்திருக்கிறேன். மேலும், பல்வேறு இடங்களில் முகவரிகள் திரட்டும் பணியில் இறங்கியுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் உதவ வேண்டும். நேசமுடன், மடல் இதழ் பெற விரும்புவர்கள், &lt;a href="mailto:suve75@sify.com"&gt;suve75@sify.com &lt;/a&gt;ஐத் தொடர்புகொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், தங்கள் முகவரிகளைத் தரவிரும்புபவர்களும், &lt;a href="mailto:suve75@sify.com"&gt;suve75@sify.com &lt;/a&gt;ஐ தொடர்புகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிய தொடக்கம்தான். அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ய முனைந்திருக்கிறேன். பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108161915516226321?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108161915516226321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108161915516226321'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_10_archive.html#108161915516226321' title='நேசமுடன் : மடல் இதழ்'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108161901624678087</id><published>2004-04-10T10:43:00.000-07:00</published><updated>2004-04-10T10:47:26.983-07:00</updated><title type='text'>பரபரப்பு நேரம்</title><content type='html'>தமிழகத் தேர்தல் சூடுபிடிப்பதற்கான காரணங்கள் தோன்றிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரை, திமுக முகாம், தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது. அதிமுக முகாம், அதற்குப் பதில் தருவதும், மேன்மேலும் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டி, பிரச்சாரம் செய்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, வைகோ மீது பொடாவைக் கொண்டு &lt;a href=http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20040410084701&amp;Title=Latest+News+Page&amp;lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&amp;Topic=0 target=_blank&gt;வழக்குத் தொடுத்ததில் முகாந்திரம் இல்லை&lt;/a&gt; என்று நீதிபதி சகாரியா சொல்லிவிட்டார். அவரோடு கைதான 8 பேருக்கும் இதே நிலைதான். ஆக, ஜெயலலிதா அரசு, பொடாவை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு வலுவான ஓர் கருத்து உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக முகாமுக்கு இனி கொண்டாட்டம்தான். வீதிக்கு வீதி, இதையே சொல்லி ஓட்டுக் கேட்கலாம். நீதி வேண்டி மக்கள் மன்றத்தின் முன் போராடலாம். வைகோ, &lt;a href=http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20040410051430&amp;Title=Latest+News+Page&amp;lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&amp;Topic=0 target=_blank&gt;தங்கள் மீது பரிவு மக்களுக்குப் பரிவு ஏற்பட்டிருக்கிறது&lt;/a&gt; என்று உற்சாகமாகக் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பக்கம், இல. கணேசன், என்ன சொல்ல வருகிறார் என்றே புரியாமல் ஒரு &lt;a href=http://www.dinakaran.com/daily/2004/Apr/10/others/topstory3.html target=_blank&gt;பேட்டி கொடுத்திருக்கிறார்.&lt;/a&gt; ஜெ. செய்ததை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளித்திருத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதை திமுக முகாம் பயன்படுத்திக்கொள்ளுமா என்று தெரியவில்லை. நான் பார்க்கும் சன் செய்திகளில், கைகோ வருவதேயில்லை. அல்லது இனிமேல்தான் அதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகவேண்டுமோ என்னவோ? &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி சகாரியா கூறியது பரிந்துரைதான் என்று திமுக முகாம் சும்மா இருந்துவிடலாம். அல்லது, இந்த விஷயத்தில் கை வைத்தால், அது இலங்கைத் தமிழர்கள், அவர்களின் சுயநிர்ணய உரிமை போன்ற இடியாப்பச் சிக்கலில் போய் மாட்டிக்கொண்டு, தமிழக மக்களிடம் பேர் ரிப்பேர் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கலாம். மேலும், வைகோவை முன்னிறுத்தி பேசுவதில், அவர் ஹீரோ ஆகிவிடுவாரோ என்ற தயக்கமும் இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக முகாம், இதை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநடுவே, நாளை ரஜினி மனம் திறக்கப்போகிறார். பா.ஜ.க. ஆதரவு நிலையைத்தான் அவர் எடுக்கப் போகிறார் என்று பா.ஜ.க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக அணியில் வேறு அச்சம். ரஜினி, தங்களை ஏதும் குறைசொல்லிவிடக் கூடாதே என்ற அச்சமது. &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் தாக்கப்பட்ட &lt;a href=http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20040410035932&amp;Title=Latest+News+Page&amp;lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&amp;Topic=0 target=_blank&gt;ஏழு நபர்களையும் ரஜினி சந்தித்திருக்கிறார்.&lt;/a&gt; அவர்களை வைத்துக்கொண்டுதான் நாளை ரஜினி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கப்போகிறார் என்கிறார்கள். அவர் எது சொன்னாலும், அது நிச்சயம், ரஜினி ரசிகர்களுக்கு வேத வாக்காகத்தான் இருக்கப் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பரபரப்புக்கான நேரம் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108161901624678087?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108161901624678087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108161901624678087'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_10_archive.html#108161901624678087' title='பரபரப்பு நேரம்'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108113261710367997</id><published>2004-04-04T19:36:00.000-07:00</published><updated>2004-04-04T19:40:40.356-07:00</updated><title type='text'>அற்புத நாள்</title><content type='html'>நேற்று ஒரு அற்புத நாள். விட்டால், வீட்டை அங்குலம் அங்குலமாகத் துடைத்திருப்பேன். பயங்கர கிளினீங் ஸ்பீரி.&lt;br /&gt;&lt;br /&gt;அதனோடு, முக்கிய வேலை, கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியிடுவதற்காகக் கட்டுரைகளைத் தொகுப்பது. 1999/2000க்கு பின் எழுதிய அனைத்தும் கணினியில் இருந்ததது. அதற்கு முன் உள்ளதைத் தேடிப் போக, கிடைக்காதனவெல்லாம் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, 1998 நான் எழுதிய ஒரு நாவல் கிடைத்தது. நானும் ராகவனும் 98 மார்ச் கடைசி வாரத்தில், கன்னியாகுமரி விவேகானந்தர் மையத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து, ஆளுக்கொரு நாவல் எழுதினோம். மறக்க முடியாத அநுபவம். காலையில், கடற்கரை வரை ஒரு நடை. பின், காபி, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, உட்கார்ந்தால் மதியம் வரை எழுத்து. குளித்து, மதிய உணவு முடித்து மீண்டும் உட்கார்ந்தால், மாலை வரை எழுத்து. மாலை காபியோடு ஒரு நடை. மீண்டும் எழுத்து. இரவு உணவு. மீண்டும் எழுத்து. &lt;br /&gt;&lt;br /&gt;இதுநடுவே, சுந்தர ராமசாமியைப் பார்க்கப் போவது, கன்னியாகுமரி கோவிலுக்குப் போவது, மற்றுமுள்ள நண்பர்கள் வீட்டுக்குப் போவது என்று வைத்துக்கொண்டு, ஒரு விடுமுறையை அற்புதமாகக் கொண்டாடினோம். சென்னை வந்தபின், அந்த நாவலை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஒரு நிலையில காணாமலே போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நேற்று கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட 150 பக்கங்கள். இன்றைய வளர்ச்சியில், அந்த நாவலை மறுபடி எழுதினால் தான் பிரசுரிக்கத் தகுதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மற்றொரு விடுமுறை எப்போது கிடைக்கப் போகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தொரு அதிசயம், கவிதைகள். கவிதைகளைப் பொறுத்தவரை நான் காத்திருப்பவன். மற்ற எழுத்து வகைகளை அடித்துத் துவைத்து பிழிந்து காயப் போடத் தயங்காதவன். ஆனால், கவிதைக்கு மட்டும் வேறு சலுகை. அது தன்னால் வரும் வரை நான் காத்திருக்கத் தயார். எதையும் எப்படியும் எழுதிவிட வேண்டும் என்ற பரபரப்பு துளியும் இல்லாதவன். அநுபவம் கவிதையாகக் கனிந்துவரும் வரை காத்திருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அப்படித்தான், கிட்டத்தட்ட 13 கவிதைகள் கிடைத்தன. 2000க்குப் பின் மூன்றோ நான்கோ கவிதைகள்தான் எழுதியிருக்கிறேன். அவை பத்திரமாகக் கணினியில் இருக்கின்றன. எளிமையான கவிதைகள். படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. 1995ல் 'வேறுமுகம்' என்றொரு கவிதைத் தொகுதி வந்தது. எனக்குத் தெரிந்து யாரும் அதைப் படித்தாற்போல் தெரியவில்லை. அதில் 21 கவிதைகள் இருக்கின்றன. மொத்தமாய்க் கூட்டினால், எனது 17 வருட சர்வீஸில் 37 கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதிகம்தான்!!!&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாய்த் தொகுத்து, ஒரு தொகுதி கொண்டுவரலாம் என்று தோன்றியது. ராகவன், கவிதையெல்லாம் போடமாட்டேன், கொண்டே வராதே என்றுவிட்டான். வேறு பதிப்பகம் தேடவேண்டும். இல்லை சுயமாய் போட்டுவிடவேண்டியதுதான். தொகுதிக்கு தலைப்பு ரெடி,&lt;br /&gt;&lt;br /&gt;'முகமற்றவர் நினைவாக'&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108113261710367997?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108113261710367997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108113261710367997'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_04_archive.html#108113261710367997' title='அற்புத நாள்'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108101180105309452</id><published>2004-04-03T09:03:00.000-08:00</published><updated>2004-04-03T09:07:02.686-08:00</updated><title type='text'>மற்றொரு அத்தியாயம்?</title><content type='html'>நான் எது நடக்கக்கூடாது என்று பயந்தேனோ அது நடந்தேவிட்டது. ரஜினி தொண்டர்கள் நேற்று &lt;a href=http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=26843 target=_blank&gt;அடித்து ரத்தகளறி ஆக்கப்பட்டிருக்கிறார்கள்&lt;/a&gt;. மதுரையில் வேட்பாளர் மோகனை ஆதரித்துப் பேச வந்த பா.ம.க. தலைவர் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட முற்பட்ட ரஜினி ரசிகர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று &lt;a href=http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=26919 target=_blank&gt;ராமதாஸ், தமது பேட்டியில்,&lt;/a&gt; அது போலீஸின் ஊறுதுணையோடு நடைபெற்ற ஒன்று என்று கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி, சிருங்கேரியில் இருந்து, தமது தொண்டர்களுக்கு அறிக்கை விட்டு, ஆறுதல் சொல்லி, சென்னை வந்தபின் மனத்தைத் திறந்துகொட்டுகிறேன் என்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விஷயங்கள் நடக்கப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. நேரடி அரசியலுக்கு வரும் முடிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த ரஜினி வேறு முடிவுக்கு வர நேரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. மாநிலம் முழுவதும் ரஜினி ரசிகர்கள், பா.ம.க.வுக்கு எதிராக வேலை செய்வது உறுதியாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் மற்றொரு அத்தியாயம் தொடங்குவதற்கான ஆரம்பமோ இது?&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108101180105309452?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108101180105309452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108101180105309452'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_03_archive.html#108101180105309452' title='மற்றொரு அத்தியாயம்?'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108092790523829914</id><published>2004-04-02T09:45:00.000-08:00</published><updated>2004-04-02T09:48:45.123-08:00</updated><title type='text'>அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?</title><content type='html'>விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன். &lt;br /&gt;&lt;br /&gt;டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப்  பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108092790523829914?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108092790523829914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108092790523829914'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_02_archive.html#108092790523829914' title='அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108092780245009109</id><published>2004-04-02T09:43:00.000-08:00</published><updated>2004-04-02T09:47:02.360-08:00</updated><title type='text'>இப்படியும் ஒரு மனிதர்!!</title><content type='html'>கொஞ்சம் மெயின் டிராக்கில் இருந்து தள்ளிப் போகிறேன். திட்டாதீர்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;பா. ராகவனின் வாத்தியாரோடு கச்சேரி பதிவை நீங்கள் எல்லாரும் படித்திருப்பீர்கள். அதன் ஹீரோவான வண்ணநிலவனோடு இன்று மாலை மீண்டும் பேசிக்கொண்டிருந்தேன். குரலில் தென்படும் கனிவுக்கு ஈடுஇணையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதப்போகும் நாவலின் அத்தியாங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு வாக்கில், அவர் தமிழ் சி·பியில் எழுதிய காலம் நாவலை ஏன் இன்னும் புத்தகமாக வெளியிடவில்லை, உடனே செய்யவேண்டியதுதானே... என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாவலை அவருடைய நண்பர் ஒருவர் பிரசுரிக்க முன்னரே வாக்குகொடுத்துவிட்டதால், வேறு யாருக்கும் தராமல் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அந்த நண்பர் இப்போது, நல்ல நிலையில் இல்லை. ஆனால், அவர் மீண்டு வரும்வரை, வண்ணநிலவன் நாவலை வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கட்டுரையெல்லாம் கூடத் தொகுக்கலாமே? துர்வாசர் கட்டுரைகளே நிறைய இருக்குமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, ஆமா.. இருக்கு.. நூறுக்கும் மேல இருக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் எழுத்தாளர் பத்தி எழுதுன சீரியஸ் ஒண்ணும் இருக்கே.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"குடுங்களேன் சார். தொகுதி போடச் சொல்றேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;"போடலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;வினாடிகளில் மெளனம் கரைந்துகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. பிரச்சினை அதுவல்ல வெங்கடேஷ். புக்கா போட்டுட்டா... நண்பர்களெல்லாம் படிப்பாங்க. பரிசு, விருது, அது இதுன்னு கொடுக்க சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க... அது நமக்கு அவ்வளவா சரிப்பட்டு வராது. ரொம்பக் கூச்சமா வருது..."&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் சில நொடிகள் நான் பேச்சற்றுப் போனேன். பரிசு வந்துவிடுமோ என்று புத்தகமே போடத் தயங்கும் வண்ணநிலவனை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108092780245009109?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108092780245009109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108092780245009109'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_04_02_archive.html#108092780245009109' title='இப்படியும் ஒரு மனிதர்!!'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108064936482531186</id><published>2004-03-30T04:22:00.000-08:00</published><updated>2004-03-30T04:26:20.420-08:00</updated><title type='text'>இப்படிப் பார்ப்பது சரியா?</title><content type='html'>நான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கருணாநிதிக்கு... "&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் திகைத்துப் போவேன். &lt;br /&gt;&lt;br /&gt;"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;எதிராளி கொஞ்சம் யோசிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;பல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மத்திய அரசைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் தோன்றவில்லையோ என்று எனக்கு எண்ணம் உண்டு. நாளுக்கு நாள் நாம் உள்ளுர் அரசியலில் முழ்கிக்கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர்கள் என்றோ, தலைமை என்றோ எல்லாம் யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் கூட, சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்ற பிரச்சாரம் எடுபட மாட்டேன் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான். &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108064936482531186?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108064936482531186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108064936482531186'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_30_archive.html#108064936482531186' title='இப்படிப் பார்ப்பது சரியா?'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108056224629354592</id><published>2004-03-29T04:10:00.000-08:00</published><updated>2004-03-29T04:14:20.670-08:00</updated><title type='text'>ரஜினி முடிவு: யாருக்கு லாபம்?</title><content type='html'>கடைசியில் &lt;a href=http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20040328115223&amp;Title=TamilNadu+Page&amp;lTitle=R%AAZLm&amp;Topic=-42&gt;ரஜினியின் அறிவிப்பு&lt;/a&gt; வந்துவிட்டது. அகில இந்திய ரஜினி ரசிகர்கள் மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணா, நேற்று புதுவையில் பேசும்போது, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக, அது போட்டியிடும் 6 தொகுதியிலும் எதிர்த்துப் பிரச்சாராம் செய்து தோற்கடிப்போம் என்று கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்தபோதில் இருந்தே, ரஜினியின் நிலை என்னவாக இருக்கும் என்று பேச்சுக்கள் உலா வரத் தொடங்கின. பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலையையே அவர் எடுப்பார் என்று கருதப்பட்டு வந்தது. அதற்கு முன்னர், அவரது தொண்டர்கள், பா.ம.க.வினரால் பல இடங்களில் தாக்கப்பட்டனர். அத்துடன், டாக்டர் ராமதாஸ், பல இடங்களில் ரஜினியைத் தரக்குறைவாகப் பேசியும் வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள்களுக்கு முன் வந்த பத்திரிகை பேட்டியொன்றில், ரஜினியோடு பேசி சமரசம் ஏற்பட்டு விட்டது என்று டாக்டர் அன்புமணி கூறியிருந்தார். ஆனால், நேற்றைய பேட்டியில், சத்யநாராயணா அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லை என்று கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேர்தல் என்று வரும்போது, வெற்றி தோல்வியையை நிர்ணயிக்க பல்வேறு சக்திகள் செயல்படுகின்றன. தமது நடிப்பால், பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ள ரஜினியும் அத்தகைய ஓர் சக்தியாக வளர்ந்து வந்திருப்பதாக நம்பப்படுகிறது. 1996 சட்டசபைத் தேர்தலில் அவரது குரல் எடுபட்டது. அன்றைய நிலையில், பெருவாரியான மக்களின் மனநிலை ஜெயலலிதாவுக்கு எதிரானதாக இருந்தது. அதையே, ரஜினி பிரதிபலித்ததாகவும் கூறுவோர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், 1999 மக்களவைத் தேர்தல் மற்றும் 2001 சட்டசபைத் தேர்தல்களில் அவர் பங்கேற்கவில்லை. ஏதும் கருத்து சொல்லாமலே தவிர்த்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் பாபா திரைப்படம் வெளியானபோது, பா.ம.க.வினர் ஏற்படுத்திய சேதம், ரஜினியையும் அவரது ரசிகர்களையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்தத் தேர்தலில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவே, இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதாக மன்ற பொறுப்பாளர் பேசியிருக்கிறார். தேவைப்பட்டால், தானே நேரில் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளில் மூன்றில் பா.ஜ.க.வும், மூன்றில் அ.தி.மு.க.வும் எதிர்த்துப் போட்டியிடுகிறது. ரஜினியின் இந்த எதிர்ப்பு, எதிரணியினருக்கு பெரும் பலமாக அமையும் என்று அனைவரும் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநடுவே, கலைஞர் - ரஜினி சந்திப்பு நடந்துவிட்டால், இந்தத் பிரச்சினை தவிர்க்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, சத்யநாராயணாவின் இந்த அறிவிப்பு, சில செய்திகளைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. ரஜினி, அதிமுகவைச் சகித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்.&lt;br /&gt;2. அதன்மூலம், தி.மு.க தொண்டர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ளவும் தயாராகிவிட்டார்.&lt;br /&gt;3. தனக்கு என்று ஒரு தொண்டர் சக்தி இருக்கிறது, அதன் பரிமாணம் என்ன என்பதைப் புரியவைத்துவிடும் வேகம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ரஜினியில் இந்த முடிவை வேறு கண்கொண்டு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். பதிலுக்கு பதில் என்று இந்த மோதல் தொடருமானால், மனக்கசப்பு தீரப்போவதில்லை. இன்று, ரஜினியினாலோ அல்லது வேறு காரணங்களாலோ பா.ம.க வேட்பார்கள் தோற்றார்களெனில், நாளை அவர்கள் வெறுமனே இருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. ரஜினியின் அடுத்த படத்திற்கு மீண்டும் தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்று எந்த நிச்சயமுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு தரப்பு, இதை விட்டுக்கொடுத்து, சமாதானம் பயிலுவதே பிரச்சினைக்குத் தீர்வு என்று கருதுபவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, பத்திரிகைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கொண்டாட்டம்தான். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிடப் போகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108056224629354592?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108056224629354592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108056224629354592'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_29_archive.html#108056224629354592' title='ரஜினி முடிவு: யாருக்கு லாபம்?'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108029777456649576</id><published>2004-03-26T02:42:00.000-08:00</published><updated>2004-03-26T02:46:24.296-08:00</updated><title type='text'>தேர்தல் நிதி 1</title><content type='html'>நான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரக் கேட்டு போர் போடறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரக் கேக்கணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கார்ப்ரெஷன் ஏ.ஈ.கிட்ட சொன்னீங்களா? பர்மிஷன் வாங்கினீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் லேசாகச் சிரித்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ப்பரெஷன் தேர்தலுக்கே இப்படியென்றால், மக்களவைத் தேர்தலுக்கு...?&lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும்? பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற  கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108029777456649576?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108029777456649576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108029777456649576'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_26_archive.html#108029777456649576' title='தேர்தல் நிதி 1'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-108028443891423547</id><published>2004-03-25T23:00:00.000-08:00</published><updated>2004-03-25T23:04:09.013-08:00</updated><title type='text'>முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறேன்</title><content type='html'>இரா.முருகன் விஷயத்துக்கு என் வரையில் முற்றுப்புள்ளி வைத்துவிடவே விரும்புகிறேன். தேவையில்லாமல் மனவருத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இன்று காலை மதி அவர்களின் வலைப்பதிவைப் படித்தேன். &lt;a href=http://tamil.weblogs.us target=_blank&gt;நடந்தது என்ன&lt;/a&gt; என்று விளக்கமாக எழுதியிருக்கிறார் மதி. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று நிலைமைகள் மாறிவிட்டன. பார்வைகள் மாறிவிட்டன. மதிப்பீடுகளும் மாறிவிட்டன. இந்தக் கண்ணாடியை போட்டுக்கொண்டு, பழைய மடல்களைப் பார்ப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இது ஒரு பாடம். பழைய பாடம் ஒன்றின் மற்றொரு மறு ஒளிபரப்பு. என் பழைய அலுவலகத்தில் ஒரு மேலாளர் இருந்தார். அவரோடு நான் பயணப்பட வேண்டிய பல சந்தர்ப்பங்கள் நேர்ந்தது உண்டு. விமானப்படையில் இருந்து ஓய்வுபெற்றபின், அவ்வலுவலகத்தில் மேலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். நன்றாகப் பழகக்கூடியவர். விமானங்கள் பற்றியும் அவர் பங்குபெற்ற போர்கள் பற்றியும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன். சலிப்பே இல்லாமல் விளக்குவார். உண்மையில் அவரது மகனைவிட அதிக நெருக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு எனக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை தில்லி போய் அங்கிருந்து ஜெய்ப்பூருக்குக் சென்றோம். இரயில்வே நிலையத்தில் அவரது பெட்டிகளை நான் ஆர்வத்தோடு சுமக்க போனபோது, தடுத்து நிறுத்தினார். நான் வற்புறுத்தினேன். கடுமையாக ஒரு வரி சொல்லி என்னை ஸ்தம்பிக்க வைத்தார். நான் துவண்டு போனேன். பாச மேலீட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் உரிமை பலசமயங்களில் எவ்வளவு தவறாக ஆகிப்போகிறது என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் சென்று, புரிந்துகொண்டேன்.&lt;br /&gt;அவரவர்க்னென்று ஒரு Mind Space இருக்கிறது. Privacy என்று ஒன்றிருக்கிறது. என்னதான் பாசம் என்றாலும், இன்றைய வாழ்வில் இதையெல்லாமும் நாம் கடைபிடிக்கவேண்டும் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மிக நுட்பமான உணர்வு இது. முருகன் விளங்கிக்கொள்ளவில்லை. அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-108028443891423547?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108028443891423547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/108028443891423547'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_25_archive.html#108028443891423547' title='முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறேன்'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-107979875095749845</id><published>2004-03-20T08:05:00.000-08:00</published><updated>2004-03-20T08:09:13.280-08:00</updated><title type='text'></title><content type='html'>முதலில் மன்னிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் எழுத முயற்சிக்கிறேன் என்று சொல்லி இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். மூன்று நாள்களாய் ஒன்றும் எழுதவில்லை. நான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு படிப்பின் பிராக்டிகல் கிளாஸ் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான தயாரிப்புகள், பிராஜக்ட் சப்மிஷன் என்று பெண்டு கழட்டிவிட்டார்கள். நேற்று எழுதலாம் என்று வந்து உட்கார்ந்தேன். மரத்தடி இணையக் குழுவில் நண்பர் இரா.முருகனை விமர்சித்து பிகே சிவகுமார் எழுதியிருந்த ஒரு கடிதத்தையும் அதனைத் தொடர்ந்து நடந்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அப்புறம் புத்தி ஓடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகுமாருக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அவரது கடிதத்தை மீண்டும் படித்தபோது, இன்றைய நாளின் சில மனநிலைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;1. இன்றைக்கு யாருக்கும் அட்வைஸ் பிடிப்பதில்லை. அட்வைஸ் செய்பவர்களையும் பிடிப்பதில்லை. அட்வைஸ் அவசியமற்றுப் போய்விட்டதோடு, சகிக்கமுடியாமலும் ஆகிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. இணையம் என்ற ஊடகம், மனிதர்களைக் காட்டுவதில் உள்ள தோற்றக் குறை எப்படிப்பட்டது என்பதை இங்கே காணமுடிந்தது. பி.கே.சிவகுமார் என்ற மனிதரை நான் அறியேன். அப்படியே, அவர், முருகனையோ, ஹரிக் கிருஷ்ணனையோ அறியார். எல்லாரும் அறிந்தது, அவரவர்களின் எழுத்துக்களைத்தான். எழுத்துக்கள், எவ்வளவு குறைபட்டுக் கிடக்கிறது என்பதை என்னால், இங்கே புரிந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;3. சிவகுமாரின் சில சொற்கள் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;"...இரா.முருகனுக்குப் போட்டி நம்மை விட்டுவிட்டு நல்லபடியாக நடந்து முடிந்து வேறு யாரும் பேர் வாங்கி விடுவார்களோ என்ற பயம் ..."&lt;br /&gt;&lt;br /&gt;"...அடுத்தவர்கள் நடத்துவதை வாழ்த்துவோம், நம்மால் முடிந்ததை நாமும் செய்வோம் என்கிற எந்த நல்ல எண்ணமும் இல்லாமல், மரத்தடிக்கு முருகன் கொடுத்த தொல்லைகள் கொஞ்சமல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரே கட்டடத்தில் மேலும் கீழுமாக நானும் முருகனும் பணியாற்றியிருக்கிறோம். அதற்கு முன்பிருந்தே, அவரது எழுத்தின் மூலம் அறிமுகம் கிடைத்து, பழகி புரிந்துகொண்டிருக்கிறோம். முருகன் ஒரு வெகுளி. படபடவென பேசத் தெரியும். எழுதத் தெரியும். மரத்தடிக் குழு பற்றியும், அங்குள்ள சந்திரமதி மற்றும் உறுப்பினர்கள் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை அபரிமிதமானது. 'நவீன இலக்கியத்துக்கு வரும் புதிய உற்சாகமான தலைமுறை அது' என்றும், அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்துவதும், நல்ல எழுத்துக்களை அறிமுகப்படுத்துவதும் அவசியம் என்றும் எங்கள் டைடல் பார்க் தினசரி ·புட்கோர்ட் சந்திப்புகளில் அவர் கூறியிருக்கிறார். இன்றைக்கு அதே முருகன், நான் இணையக்குழுவில் எழுத வந்ததே தவறு என்று பொருள்படும்படி, இராயர் காபிக் கிளிப்பில் எழுதியிருக்கிறார். படிக்க வேதனையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5. பெறப்படும் நீதி யாதெனில்: அவரவர்க்கென்று ஒரு பாதை உண்டு. யாரும் யாருடையதையும் போய் செப்பனிட்டுவிட முடியாது. முருகன் முந்திரிக்கொட்டையாக (மன்னிக்க வேண்டும் முருகன்!) போய், மரத்தடி நண்பர்களையும் தம் சகோதரர்கள் போல் பாவித்து, உரிமை எடுத்துக்கொண்டது தவறு. அந்தத் தவறுதான் சிவகுமார் சொல்வது போல், "....மரத்தடிக்கு முருகன் கொடுத்த தொல்லைகள்..." ஆகப் பரிணமித்திருக்கிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;6. உங்களுக்குத் இது தேவையா முருகன்? நீங்கள் கடிந்துகொண்டாலும், திட்டினாலும், முறைத்துக்கொண்டு பரதேசம் போனாலும், உங்களை இழுத்துக்கொண்டு வரும் பொறுப்பை இங்கே ஒரு மூன்று நான்கு பேர் செய்யக் காத்திருக்கிறோம். அது உங்கள் எழுத்தின் மேல் உள்ள மதிப்புக்காக. &lt;br /&gt;&lt;br /&gt;7. சிவகுமாருக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. எல்லாம் முருகனுக்குத்தான். அதனால்தான், சிவகுமாருக்கு எழுதுவதை விட, முருகனுக்கு எழுதலாம் என்று இதை எழுதி என் வலைப்பதிவில் போடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;8. மீண்டும் மன்னிக்க. மக்களைத் தேர்தல் பற்றி பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, வேறு பொருத்தமற்ற விஷயத்தைப் பேசியிருக்கிறேன். பொருத்தருள்க.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-107979875095749845?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107979875095749845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107979875095749845'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_20_archive.html#107979875095749845' title=''/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-107945685034452954</id><published>2004-03-16T09:07:00.000-08:00</published><updated>2004-03-16T09:10:47.233-08:00</updated><title type='text'>Trying to improve my blog</title><content type='html'>மகிழ்ச்சிகரமான செய்தி... கொஞ்ச கொஞ்சமாய் வலைப்பதிவை சரி செய்துகொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-107945685034452954?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107945685034452954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107945685034452954'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_16_archive.html#107945685034452954' title='Trying to improve my blog'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-107944168478698800</id><published>2004-03-16T04:54:00.000-08:00</published><updated>2004-03-16T04:58:00.840-08:00</updated><title type='text'>உதிரிகள் 1</title><content type='html'>ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், இந்த உதிரிகள் தலையெடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவரை பேச்சு மூச்சற்று இருக்கும் இந்த நபர்கள், திடீரென்று ஊடகங்களில் வித்யாசமாக போஸ்கள் கொடுத்துக்கொண்டு, அதிரடி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த தேர்தலில் தலைதென்படும் சில உதிரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. எம். நடராசன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக வாரமிருமுறை இதழ்களில் இரண்டு வாரத்துக்கொருமுறை இவர் ஏதேனும் பேசுவார். இல்லை இவரது தொண்டரடிப்பொடிகளில் ஒருத்தர் பேசியதாக, செய்தி வரும். அல்லது, அதிபுத்தியாலி நிருபரின்  தலையைச் சுற்றி முக்கைத் தொடும் கற்பனை ஒன்று வெளியாகும். இவரும் சலிக்காமல் ஊடங்களுக்குத் தீனி போடத் தவறுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில், தான் பின்னணியில் செயல்பட்டது போதும், முன்னணிக்கு வருகிறேன் என்று ஓபன் அறிக்கை விட்டு, அதிமுக தனக்கு தேர்தல் சீட் வழங்கவேண்டும் கேட்டுக்கொண்டார். தஞ்சை, சென்னை என்று பிரும்மாண்ட புத்தக வெளியீட்டு விழாக்கள் வைத்து, ஆதீனங்கள், ஆசியோடு அரசியல் பேசும் அற்புதங்களையும் நடத்திக் காட்டினார். ஆனால், போயஸ் தோட்டக் கதவுகளை தட்ட அது சரியான வழியில்லை போலும். அம்மா கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. சுப்பிரமணியம் சுவாமி&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக தனக்கு தேர்தல் சீட் தரும் என்ற நம்பிக்கை இவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. இப்போதும், திமுகவையும் கருணாநிதியையும் திட்டி அறிக்கைகள் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரது அறிக்கைகளைப் படிக்கும்போதும், முன்பெல்லாம் சிரிப்பு வரும். இப்போது, லேசாக எரிச்சல் வருகிறது. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-107944168478698800?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107944168478698800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107944168478698800'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_16_archive.html#107944168478698800' title='உதிரிகள் 1'/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627184.post-107942621341366140</id><published>2004-03-16T00:36:00.000-08:00</published><updated>2004-03-16T03:38:04.700-08:00</updated><title type='text'>மக்களவைத் தேர்தல் 2004 </title><content type='html'>கொஞ்ச நாளாய் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன எழுதுவது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அதுவும் ஒன்றுக்கு இரண்டு வலைஇதழுக்கு ஆசிரியராக அமர்ந்துகொண்டிருப்பவனுக்கு, எழுதுவதே தொழிலாகக் கொண்டிருப்பவனுக்கு, இடம் ஒரு பொருட்டல்ல. இதன் காரணமாகவே, இதுநாள் வரை ஒரு வலைப் பதிவை ஆரம்பிக்காமல் இருந்தேன். எது எழுதினாலும், சி·பி தமிழ் வலைதளத்திலோ, சமாச்சார் தமிழ் வலைதளத்திலோ வெளியிட்டுக் கொள்ளும் வசதி இருக்கையில், வலைப் பதிவு வாசகர்களுக்கு என்ன புதிதாகத் தரப்போகிறேன் என்ற கேள்வியும் என்னை எழுதவிடாமல் செய்துகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததோ இல்லையோ, வழக்கம்போல், என் பரபரப்பும் கூடிப்போய்விட்டது. ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள், கருத்துக்கள், கணிப்புகள், போக்குகள், ஆற்றாமைகள், எதிர்பார்ப்புகள் என்று வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஊடகமும் இந்தத் தேர்தலை தத்தமது வழியில் அர்த்தப்படுத்துவதும், அலங்காரப்படுத்துவதும், அர்த்தமிழக்கச் செய்வதை செய்துகொண்டே இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று நினைத்தபோது, வலைப்பதிவு தொடங்குவதற்கான ஒரு உருப்படியான காரணம் கிடைத்தது. உடனே வழக்கம்போல், எனக்குள் இருக்கும் மற்றொரு பத்திரிகையாளன், என்னைப் பேட்டி எடுக்கத் தொடங்கிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1: கடைசியில் நீயும் இந்தக் குட்டையில் விழுந்துவிட்டாயா? (ஹா ஹா ஹா) உன் அறிவின் விசாலத்தையும், ஞானத்தையும் தம்பட்டம் அடித்துக்கொள்ள வழிகண்டுபிடித்துவிட்டாய்? சரிதானே? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.2: யாருக்குத்தான் இந்த ஆசையில்லை. எழுதுவதே, அடுத்தவர் படிக்கத்தானே? எழுதுவதே, அடுத்தவர் மெச்சத்தானே? அதன் மூலம் என் அறிவின் கூர்மை வெளிப்படுமாயின், மகிழ்ச்சிதானே? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி1: சரி, மக்களவைத் தேர்தல் பற்றி எழுதப்போகிறாயாமே? உனக்கு அரசியல் தெரியுமா? (ஹி ஹி ஹி) &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.2: ஒரு நம்பிக்கைதான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தினமணி படிக்கிறேன். அப்பா வழியாக கொஞ்சம் கம்யூனிஸ்டுகளையும், கம்யூனிஸமும் கற்றவன். அதன் பின்னர், அதையெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, முடிந்தவரை உலக இலக்கியமும் அரசியலும் படிக்க முயற்சித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று நான்கு தேர்தல்களில் ஓட்டுப் போட்டிருக்கிறேன். இந்தத் தகுதி போதாதா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1.: சரி, புதிதாக ஏதாவது எழுதுவியா? இல்லை, அரைத்த மாவையே அரைப்பாயா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.2: மாவு பழசாக இருக்கலாம். தோசை புதிதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1: (ரகசியமாக) நிறைய பேர், நீ என்னவோ மேதாவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் மூலம் நீ ஒரு வெத்துவேட்டு என்ற குட்டு வெளிப்பட்டு விடப்போகிறது!!! &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.2: நான் மேதாவி இல்லையென்பது எனக்கே தெரியும். அடுத்தவர்களுக்குத் தெரிவதில் எனக்கு பெரிய நஷ்டமொன்றுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1: இந்தத் தொடரை எழுதி நீ என்ன சாதிக்கப் போகிறாய்? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.2: ஒன்றும் பெரியதாக இல்லை. எனக்கு எவ்வளவு அரசியல் தெரியும் எனக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள இது உதவியாக இருக்கலாம் என்ற நப்பாசைதான். கூடவே, இதை அனைவரும் படிக்கும்போது, நிச்சயம் எதிர்வினை இருக்கும். அதன்மூலம் இன்னும் கொஞ்சம் அரசியல் கற்றுக்கொள்ளலாமே? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1.: உனக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே, தினமும் இந்த வலைப்பதிவை அப்டேட் செய்வியா? &lt;br /&gt;ஆர்.வி.2: முயற்சிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1: தேர்தல் முடிந்தபின்னர், வலைப்பதிவைத் தொடர்வாயா? &lt;br /&gt;ஆர்.வி.2: அதைப் பற்றி யோசிக்க இன்னும் நிறைய நாள்கள் இருக்கு. அப்போ பார்த்துக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1.: சரி, அரசியல் பேச ஆரம்பிச்சுட்ட. முதல் கேள்வி. தமிழ்நாட்டுல எந்தக் கூட்டணி ஜெயிக்கும்னு நினைக்கற? &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி2.: நான் சொல்றதுக்கு முன்னாடி மக்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு இங்க பாரு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வி.1: பார்த்தியா, டகால்னு ஜகா வாங்கறியே? &lt;br /&gt;ஆர்.வி.2: நிச்சயம் ஜகா வாங்கல, மே 10 வரைக்கும் இதைப் பத்திதானே பேசப்போறேன். கொஞ்சம் பொறுமையா பாரேன். இன்னிக்கே ஏன் அவசரப்படற? &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627184-107942621341366140?l=sifyrayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107942621341366140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627184/posts/default/107942621341366140'/><link rel='alternate' type='text/html' href='http://sifyrayan.blogspot.com/2004_03_16_archive.html#107942621341366140' title='மக்களவைத் தேர்தல் 2004 '/><author><name>Venkatesh R</name><uri>http://www.blogger.com/profile/02119971231560953011</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry></feed>
